உதிர் இலைகள்
இதமாய் தவழ்ந்திடும் காற்றோடு
நிதானமாய் உரையாடும் இலைகள்
நிலையாய் நிற்காமல்
கட்டற்று திரியும் வாழ்க்கை
எத்தனை அழகென்று
இலைகள் கேட்கும் கேள்விக்கு
காற்று பதில் தருவதில்லை
காற்றின் புதிரான மௌனத்திற்கு
அர்த்தம் தேடி
தங்களுக்குள் சலசலத்து
குறுகுறுப்பாய் ஆராயும்
நுனிக் கிளையில் சிறைபட்டு வாழும்
துக்கத்தின் கண்ணீரை
பனித்துளிகளுக்குள் மறைத்திடும்
பெரும்பாலும்
கடைசியாய் பார்த்தபொழுது
தன்னையும் அதனோடு கூட்டிச்செல்லுமாறு
தரையோடு புரண்டு
காற்றோடு மன்றாடிக்கொண்டிருந்தது
காய்ந்து உதிர்ந்த ஒர் இலை
நிதானமாய் உரையாடும் இலைகள்
நிலையாய் நிற்காமல்
கட்டற்று திரியும் வாழ்க்கை
எத்தனை அழகென்று
இலைகள் கேட்கும் கேள்விக்கு
காற்று பதில் தருவதில்லை
காற்றின் புதிரான மௌனத்திற்கு
அர்த்தம் தேடி
தங்களுக்குள் சலசலத்து
குறுகுறுப்பாய் ஆராயும்
நுனிக் கிளையில் சிறைபட்டு வாழும்
துக்கத்தின் கண்ணீரை
பனித்துளிகளுக்குள் மறைத்திடும்
பெரும்பாலும்
கடைசியாய் பார்த்தபொழுது
தன்னையும் அதனோடு கூட்டிச்செல்லுமாறு
தரையோடு புரண்டு
காற்றோடு மன்றாடிக்கொண்டிருந்தது
காய்ந்து உதிர்ந்த ஒர் இலை

2 Comments:
awesome!! nice finish... :-)
By
Karthik, At
December 30, 2010 8:13 PM
Thanks Karthik :)
By
Mani - மணிமொழியன், At
December 31, 2010 3:40 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home