உண்மை தேடல்
ஏதேதோ தேடி அலைந்திருந்த மனம்
பேராசை கொண்ட ஒரு நாள்
உண்மையைத் தேடத் துணிந்தது
தேடியலைந்த நான்
உண்மையென தன்னை அறிவித்த ஒன்றை
பற்றிக்கொண்டேன்
உண்மையைப் பற்றிக்கொண்டிருக்கும்
என் கைகள் தளரக்கூடும்
உண்மை நித்யம் நிலைக்கும்
என நினைத்திருந்தேன்
ஆனால் பற்றியிருந்த உண்மையின் பரப்புகளில்
சுருக்கங்கள் விழுந்த பொழுது
ஏமாற்றத்திற்கு அளவில்லை
பிறிதொன்றைப் பற்றும்வரை
உண்மை என நேற்று நினைத்தவைகள்
நீர்த் திரை பிம்பகளினும் வேகமாய்
உருமாறுவதைக் கண்டு
இன்று பற்றிக்கொண்டிருப்பவைகளின் மேல்
சந்தேக விரிசல்கள்
கணக்கற்ற முறை தேடித்தேடி
தேடல் மட்டுமே உண்மை என உணர்ந்த பின்
தேட முடியும் வரை
தேடுவதாய் முடிவு செய்துள்ளேன்
ஆனால் எதைத் தேடுவது?
பேராசை கொண்ட ஒரு நாள்
உண்மையைத் தேடத் துணிந்தது
தேடியலைந்த நான்
உண்மையென தன்னை அறிவித்த ஒன்றை
பற்றிக்கொண்டேன்
உண்மையைப் பற்றிக்கொண்டிருக்கும்
என் கைகள் தளரக்கூடும்
உண்மை நித்யம் நிலைக்கும்
என நினைத்திருந்தேன்
ஆனால் பற்றியிருந்த உண்மையின் பரப்புகளில்
சுருக்கங்கள் விழுந்த பொழுது
ஏமாற்றத்திற்கு அளவில்லை
பிறிதொன்றைப் பற்றும்வரை
உண்மை என நேற்று நினைத்தவைகள்
நீர்த் திரை பிம்பகளினும் வேகமாய்
உருமாறுவதைக் கண்டு
இன்று பற்றிக்கொண்டிருப்பவைகளின் மேல்
சந்தேக விரிசல்கள்
கணக்கற்ற முறை தேடித்தேடி
தேடல் மட்டுமே உண்மை என உணர்ந்த பின்
தேட முடியும் வரை
தேடுவதாய் முடிவு செய்துள்ளேன்
ஆனால் எதைத் தேடுவது?
Labels: கவிதை, கவிதையெனவும்

8 Comments:
ஹாஹா...... அருமைங்க... நீங்கள் உண்மையிலேயே எதையும் தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.. ஏனெனில் தொலைத்தால்தானே தேடுவதற்கு??
தேடலுக்கான பொருள் உங்களுக்கு அருகேயே இருக்கலாம்... எனது கவிதைகளில் நிசப்தம் தேடுவேன்.. ஆனால் அது என்னருகேயே இருப்பதைக் கவனிக்காமல் எங்கெங்கோ தேடிக் கொண்டிருப்பேன்...
உண்மை, அல்லது பொய்,... எந்த தேடலுக்கும் முடிவு இல்லை.. ஏனெனில் முடிவற்ற பாதையின் பிள்ளைகளாகத்தான் தேடல்கள் இருக்கின்றன.
By
ஆதவா, At
February 13, 2009 12:20 AM
வருகைக்கு நன்றி ஆதவன் !
//எனது கவிதைகளில் நிசப்தம் தேடுவேன்.. //
அழகான தேடல்
//ஏனெனில் முடிவற்ற பாதையின் பிள்ளைகளாகத்தான் தேடல்கள் இருக்கின்றன.//
உண்மைங்க :)
By
Mani - மணிமொழியன், At
February 14, 2009 8:04 AM
தங்கள் கவிதை நன்றாகவுள்ளது.
By
முனைவர்.இரா.குணசீலன், At
March 1, 2009 8:44 PM
ரசித்ததற்கு நன்றி திரு.குணசீலன் !
By
Mani - மணிமொழியன், At
March 3, 2009 7:56 PM
HI Mani,
I dont know how to type in Tamil,.....but your kavithai is just awesome.....i liked the concept of Enquiry!!!!!!!toooooo good.
By
karthika, At
October 10, 2009 9:34 PM
Thanks Karthika :) !
By
Mani - மணிமொழியன், At
October 11, 2009 1:49 PM
nice
By
தியாவின் பேனா, At
February 28, 2010 9:02 AM
thanks Diya
By
Mani - மணிமொழியன், At
February 28, 2010 11:20 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home