LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Friday, March 16, 2007

தோழிக்கு சில வரிகள்...

முதுகெலும்பில்லாதவன் ஓடி மறைந்துவிட்டான்
உறவுகள் இறுக்கியதில் உலர்ந்துவிட்டான்
நம்பிய நீ திகைத்தது உண்மைதான்
ஆனால்
புதுக்கவிதை நீ புதைந்தா போனாய்?
புரட்சிக்கவிதையாக அல்லவா மலர்ந்தாய்

காயம் சுமக்கும் உனக்கு சொல்ல
வார்த்தைகள் ஏதும் என்னிடம் இல்லை
இந்த வரிகள் மருந்தாகிடும் என்று
நான் எண்ணவும் இல்லை

காலம் ஆற்றியக் காயங்களில்
ஒன்றாகிப் போகும் இதுவும்
அதுவரை, எல்லாம் தாங்கி
சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து
சிறகுகள் வளர்த்து
சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...

Labels:

9 Comments:

  • அருமையான வரிகள். உங்கள் தோழிக்கு உங்களைப் போல் 2 நண்பர்கள் இருந்தால் போதும்; பாரதியின் புதுமைப் பெண்ணாய் பிழைத்தெழுவார்.

    By Blogger காட்டாறு, At March 16, 2007 1:50 PM  

  • அருமையான வரிகள். உங்கள் தோழிக்கு உங்களைப் போல் 2 நண்பர்கள் இருந்தால் போதும்; பாரதியின் புதுமைப் பெண்ணாய் பிழைத்தெழுவார்.

    By Blogger காட்டாறு, At March 16, 2007 1:50 PM  

  • //காட்டாறு said...
    அருமையான வரிகள். உங்கள் தோழிக்கு உங்களைப் போல் 2 நண்பர்கள் இருந்தால் போதும்; பாரதியின் புதுமைப் பெண்ணாய் பிழைத்தெழுவார்.
    //

    "காட்டாறு" தோழியே வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    சோர்ந்திருக்கும் ஒரு பெண் அவளுடைய துடிப்பை (Liveliness) திரும்ப பெற வேண்டும் என்ற கற்பனையில் எழுதியது இது :)

    உங்கள் பக்கதில் படங்களும், கவிதைகளும் அருமை.

    By Blogger Kovai Mani - கோவை மணி, At March 16, 2007 10:14 PM  

  • Lp, arpudham!! Excellent and nice imagination. You go, boy!!

    By Anonymous Anonymous, At March 18, 2007 3:54 PM  

  • Hello,
    yashuwa.blogspot.com

    By Blogger yashuwa, At March 19, 2007 5:45 AM  

  • wow!!!Nice Lines and Nice Poem!!
    Keep Up..Cheers..

    By Blogger Pree, At March 19, 2007 8:53 AM  

  • வருக Pree,
    //wow!!!Nice Lines and Nice Poem!!
    Keep Up..Cheers.. //

    Thank you, Thank you !

    By Blogger Kovai Mani - கோவை மணி, At March 20, 2007 5:42 AM  

  • தோழிக்கு ஆறுதல் தரும் மருந்தாக அற்புதமான வரிகள்!

    பாராட்டுக்கள் தோழரே!

    By Blogger இரா.ஜெகன் மோகன், At March 21, 2007 10:20 AM  

  • //இரா.ஜெகன் மோகன் said...
    தோழிக்கு ஆறுதல் தரும் மருந்தாக அற்புதமான வரிகள்!

    பாராட்டுக்கள் தோழரே!
    //

    ஜெகன் மோகன்,
    பாராட்டுக்களுக்கு நன்றி, மீண்டும் வருக :)

    By Blogger Kovai Mani - கோவை மணி, At March 21, 2007 10:20 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker